, , ,

சோழவந்தான் அருகே, தென்கரை அகிலாண்டேஸ்வரி மூல நாத சாமி கோவில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா:

temple
Spread the love

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத , ஸ்ரீமூலநாதர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வருகின்ற 15.9 2024 அன்று நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும் பொன்மாறன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா மற்றும் கோவில் செயல் அலுவலர், பிரதோஷ கமிட்டியினர் கலந்து கொண்டனர். சிவாச் சாரியார், பட்டர் கண்ணன் கும்பாபிஷேக குழுவினர் முகூர்த்தக் கால் நடுவதற்கான பணிகளை செய்தனர். நிகழ்ச்சியில், தென்கரை மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *