Tag: #srilanka

  • எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக  8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை……!

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை , எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

  • இலங்கை வர விசா தேவையில்லை…. – இலங்கை அரசு அறிவிப்பு…

    2024 அக்டோபர் 1 முதல் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வர விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த 35 நாடுகள் பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், நேபாளம், இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

  • உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா இலங்கையை தோற்கடித்தற்கு 4 மீனவர்களை இலங்கை கொன்றது – நாம் தமிழர் கட்சியினர் பேட்டி

    கோவையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கலாமணி ஜெகநாதன், டாக்டர் சுரேஷ் குமார் மற்றும் வழக்கறிஞர் பாசறை மாநில துணை தலைவர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. விடுதலை செய்யப்பட்டவர்கள் இலங்கை செல்ல உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கச்சத்தீவு பிரச்னை தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் அண்ணாமலை வாங்கி உள்ளார். தேர்தல் பத்திரம் முறைகேடு தகவல் அறியும்…