Tag: #republic day

  • 76வது குடியரசு தினவிழா – தேசிய கொடியை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்.

    நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார்பாடி வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியை பறக்கவிட்டார். தொடர்ந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் சமாதானத்தை பசைசாற்றும் விதமாக வெண் புறாக்கள் பறக்கவிடப்பட்டன. பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அணி வகுப்பு நடத்திய அணித்தலைவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும் சுதந்திர போராட்ட தியாகியர், தியாகியர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்ப்பட்ட 142 அரசு அலுவலர்கள், 45 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களும், 61…

  • 75வது குடியரசு தினம்- தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர்

    நாட்டின் 75வது குடியரசு தினம் ​வெள்ளிக்கிழமை​ கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை​ பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 208 அரசுத் துறை பணியாளர்கள் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். அதனை…

  • குடியரசு தினத்தையொட்டி நீரில் மிதக்கும் தேச தலைவர்கள் உருவத்தை வரைந்த கோவை கலைஞர் 

    நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை நாடு முழுவதும் பிரம்மாண்டமாகவும் கொண்டாடுவதற்கு அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பாளர், நீரில் வண்ண கோலப்பொடி மற்றும் மாவை கொண்டு மிதக்கும் மகாத்மா காந்தி மற்றும் மகாகவி பாரதியாரின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார். வழக்கமாக இந்த பொடிகள் சிறிது நேரத்தில் நீரில்…

  • குடியரசு தினத்தை கோவையில் பலத்த பாதுகாப்பு

    நாட்டின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெற உள்ள வ.உ.சி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து முக்கியமான இடங்களில்   பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.