Tag: #rain
-
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் மக்கள் பகல் நேரத்தில் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. ஆனாலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக
-
தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.11 லட்சம் மதிப்பிலான பொருட்கள், 324 சி மாவட்டத்தின் சார்பில் 3 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. லயன்ஸ் ஆளுநர் என்.என்.ஜெயசேகரன், மாவட்ட பொருளாளர் நக்கீரன், வட்டார தலைவர் இமயம் சங்கத்தின் இளங்கோ, ஹேப்பி ஹோம் உறுப்பினர் ஹரிஷ், உடுமலை ராயல் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், சங்க உறுப்பினர்கள், 324 ஏ மாவட்ட ஆளுநர் ஃபிரான்சிஸ் ரவி, முன்னாள் மாவட்ட ஆளுநர் முருகன்,…
-
வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளது. இதனையடுத்து நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழை…
-
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதி களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் டிச.10லிருந்து 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக் காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியில் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இல்லை என்றும் வளிமண்டல சுழற்சியால் தென்மாவட்டங்களில் ஒரு சில…
-
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 230 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் மணிக்கு 11 கி.மீ வேகத்தில் மிக்ஜம் புயல் வேகமெடுத்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தீவிர புயலாகக் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ.…