Tag: #pongalcelebrations
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிவகங்கை மாவட்டம் சிராவயல் உள்ளிட்ட இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் கலந்து…
-
2024ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு, மதுரை மாநகர காவல்துறை சார்பில் தல்லாகுளம் காவலர் குடியிருப்பு மற்றும் திடீர்நகர் காவலர் குடியிருப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவினை, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன், தொடங்கி வைத்தார். மேலும், காவல் கட்டுப்பாட்டு அறை, விரல்ரேகைப் பிரிவு, சைபர் கிரைம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகிய இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவின்போது, பல்வேறு கலை…
-
மனித உரிமைகள் சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பாக சக்கிமங்கலம் இந்திரா நகரில் பார்வையற்றோருடன் பொங்கல் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் இந்திரா நகரில் மனித உரிமைகள் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது சக்கிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகலட்சுமி காசிராஜன், மனித உரிமைகள் அமைப்பு தலைவர் டாக்டர் ஜான் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில், சக்கிமங்கலம் பொதிகை சேர்ந்த 65க்கும் மேற்பட்டோர் பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர்.…
-
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாரம்பரியப் பண்பாட்டு விழாவாகப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழர் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் பட்டிமன்றம், கிராமிய நடனங்களோடு பொங்கல் வைத்துக் கொண்டாடிய மாணவிகள் பொங்கல் விழாவின் அங்கமான உறியடித்தலில் ஆர்வத்தோடு பங்கு கொண்டனர். பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தையும் பொங்கல் வைக்கும் முறையையும் இன்றைய இளம் தலைமுறை அறிந்து கடைபிடித்தது பாராட்டத்தக்கதாக இருந்தது. கல்லூரியெங்கும் வண்ணக்…