Category: Tamilnadu

  • தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து டிரைவர்

    தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து டிரைவர் என சில ட்ரென்டிங் விடீயோக்களை பார்த் திருக்கலாம். கொங்கு பகுதியை சேர்ந்த கனிமொழி அவர்கள் தான் தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து பைலட். பொள்ளாச்சி டூ சென்னை வழித்தடத்தில் இயங்கும் “அழகன் பஸ்” பேருந்து நிறுவனத்தை கனிமொழி மற்றும் அவரது கணவரும் இணைந்து நடத்துகின்றனர். ஏற்கனவே ட்ராவல்ஸ் தொழில் செய்து வரும் கனிமொழியின் கணவருக்கு சொந்தமாக ஆம்னி பஸ் வாங்கி ஓட்ட வேண்டும் என்பது நீண்ட நாள்…

  • முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் தாயாரிடம் ஆசி பெற்று கேக் வெட்டினார்

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனிடையே, குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோபாலாபுரம்…

  • ​ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா

    ​கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், அறிவியல் மன்றம் சார்பில், தேசிய அறிவியல் தின விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக வளாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி முனைவர் கே.கதிர்வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து, அறிவியல் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளிடையே…

  • ​​எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நாள் விழா கொண்டாட்டம்

    ​எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி நிறுவனர் நாள் விழா கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை ம​ற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். விழாவிற்குச்…

  • APPVIEWX POISED FOR GLOBAL GROWTH   UNDER NEW CEO DINO DIMARINO; EXPANDS FOCUS ON INDIAN TALENT

    Coimbatore, India, February 27, 2025 :  AppViewX, a global leader in automated certificate lifecycle management (CLM) and public key infrastructure (PKI) solutions, announced its acquisition by Haveli Investments, an Austin-based private equity firm specializing in technology-driven growth investments. The move underscores Haveli’s confidence in AppViewX’s market leadership and its commitment to leveraging India’s world-class technology…

  • ஈஷா மகா சிவராத்திரி விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

    கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணி அளவில் ஈஷாவில் தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா தியானலிங்கத்தை தரிசனம் செய்தார். பின்னர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்தார். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஜக்கி வாசுதேவ் அமைச்சர் அமித்ஷாவை காரில் அவரே ஓட்டி வந்தார். மேடையில்…

  • “கோயம்புத்தூர் நகரம் முன்பு போல் இல்லை”. கடந்த கால குடிநீர் பிரச்சனைகள் வெற்றிகரமாக மாற்றியமைப்பு சூயஸ் இந்தியா சாதனை

    கோயம்புத்தூர், 26-02-2025: “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்படும் தொழில் நகரமான கோயம்புத்தூர் நகரில் முன்பு மக்கள் அன்றாடம் குடிநீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் அன்றாட வாழ்விற்கு தேவையான குடிநீர்,  நகரின் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் சிறுவாணி, நொய்யல் ஆறுகள் மற்றும் அதன் சுற்றுப்புற ஏரிகள் போன்ற பாரம்பரிய நீர் ஆதாரங்களை நம்பி இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், கோயம்புத்தூர் நகரம் அதன் குடிநீர் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கண்டுள்ளது, நகரின் 60 மாநகராட்சி வார்டுகளில் நேரடி…

  • கோவை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

    கோவையில் நாளை நடைபெறும் பாஜக புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.இங்கு அவருக்கு கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் மேல தாளங்களுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கும் மத்திய உள்துறை அமைச்சரை தொழில்துறையினர்…

  • சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    அதிமுகவைச் சேர்ந்த கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டுள்ளது. தற்போது, இந்த சோதனை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக, தனி வருமானத்தை விட அதிக அளவில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி,  செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம்,  ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன்…

  • கோவை மாநகரின் வளர்ச்சிக்காக வானதி திறம்பட செயல்படுகிறார் – முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

    கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக…