Category: Coimbatore

  • ​​ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை விழா

    ​ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் சார்பில் “அவலாஞ்ச்” விருது வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் சென்னையில் உள்ள யுபிஎஸ் இந்தியா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை இயக்குனர் வைஜயந்தி ஸ்ரீனிவாசராகவன் கலந்து கொண்டு பேச்சாற்றல், தொழிலில் முன்னேறுவதற்கான திட்டமிடுதல், மனநிறைவு, தொடர் கற்றல், குணம், தங்களைக் கவனித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவிகள் தனி வாழ்விலும் தொழிலும் முன்னேற இந்த இயல்புகள் உதவும் என்றார். முன்னதாக விழாவிற்குத் தலைமை…

  • கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில், கோவையின் காவல் தெய்வமாக மக்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் விமர்சையாக நடத்தப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும், புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் பவனி வந்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா…

  • பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் – பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை

    கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால், புதன்கிழமை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிறுத்தை இருப்பதை கவனித்துள்ளனர். மேலும், மைதானத்தில் பயிற்சியில் இருந்த மாணவர்களும் சிறுத்தையை பார்த்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு, அந்நாளிற்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டு, ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேசமயம், வனத்துறையினர் சிறுத்தையை…

  • கோவை கோனியம்மன் கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

    கோவை மாநகர காவல் துறையின் அறிவிப்பின் படி, கோனியம்மன் கோவில் தேர்திருவிழா நாளை (05.03.2025) நடைபெறவுள்ளதால், நகரில் சில முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. மாற்றப்பட்ட போக்குவரத்து திட்டம்: பேரூரிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் – செல்வபுரம், பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம். வைசியாள் வீதி வழியாக பேரூரு​க்கு செல்லும் வாகனங்கள் – உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டுக்குச் செல்ல வேண்டும். மருதமலை ரோடு, தடாகம் ரோட்டில்…

  • ஈஷாவில் களைகட்டும் தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா

    கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா நடைபெற்று வருகிறது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் இயற்கை விவசாயியும் தமிழ்த் தெம்பு விழா குழுவின் தன்னார்வலருமான வள்ளுவன் பங்கேற்று பேசினார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் வள்ளுவன் அவர்கள் பேசுகையில், “சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ் மொழியின் கிளப்பில் செவ்வாய்க்கிழமை…

  • ​சூலூரில் மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை

    கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் புதூரில் திங்கட்கிழமை காலை நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், கிருஷ்ணகுமார் என்றவர் தனது மனைவி சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர், அவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனது சொந்த ஊரான வண்டாழி ஈரட்டுகுளம் சென்று, தனது வீட்டின் முன்பாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கீதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களும் கல்லூரிக்கு சென்றிருந்த…

  • ​எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழா –  மத்திய அமைச்சர் எல் முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

    அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…

  • தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் “டிராமா” செய்கிறது -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையில் “டிராமா” செய்கிறது என்றும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும் எனவும், கோவை MyVi3 நிறுவன குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும், 50…

  • முதலமைச்சர் பூச்சாண்டி காட்டுகிறார் -வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

    பாஜக எம்.எல்.ஏ மற்றும் தேசிய மகளிரணி தலைவரான வானதி ஸ்ரீநிவாசன், தமிழக முதல்வர் எந்த ஆதாரமுமின்றி “பூச்சாண்டி காட்டுகிறார்” எனவும், அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் ஒரே அணியில் கட்சிகள் நிற்பது போன்ற “நாடகம்” நடத்துகிறார் எனவும் குற்றம் சாட்டினார். கோவையில் நிதி மேலாண்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மகளுக்கும் வங்கி கணக்கு துவக்கி, பெண்களை தன்னிறைவு அடையச் செய்வது பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய இலட்சியமாக உள்ளது. இதற்காக ‘வளம்’ இயக்கம் மூலம்…

  • ​ராயல் கேர் மருத்துவமனையில் ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சிகிச்சை தொடர்பான சர்வதேச கருத்தரங்கு

    ​கோவை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் இந்திய ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கத்தினர் இணைந்து நடத்திய  சர்வதேச கருத்தரங்கத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் பலர்  பங்கேற்றனர். கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி​ மருத்துவமனையில் உயர்தர மற்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.. சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்ற அங்கீகாரத்தை அமெரிக்க நாட்டின் எஸ்.ஆர்.சி.அமைப்பிடம் பெற்றுள்ள ராயல் கேர்…