Category: Coimbatore

  • எங்கு நின்றாலும் நான் தனித்து நிற்பேன் – கோவையில் சீமான் பேட்டி

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதை வரவேற்றார். அவர் மேலும், “இதில் முதன்மையான பங்கு எனக்கு இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள், ஆனால் நான் தனியாக நிற்பேன். நான் மட்டுமே உறுதியுடன் நிற்கிறேன்,” என்று தெரிவித்தார். சீமான், கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவரான…

  • கோவையில் ஆன்லைன் மோசடி- இரண்டு பேர் கைது

    கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் பகுதியில் கண்ணன் மற்றும் ராஜசேகர் என்ற சகோதரர்கள், வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி பலரை அதில் சேர்த்தனர். அவர்கள், கேரளா மாநில லாட்டரி குழுக்களை ஒத்த மாதிரியாக, கடைசி மூன்று எண்களுக்குப் பரிசு வழங்குவதாக குழுவில் அறிவித்தனர். இதன்வழியாக பலர் தினசரி பணத்தை இந்த இருவருக்கும் அனுப்பினர். பெரும்பாலானவர்களுக்கு பரிசு கிடைக்காமல், சிலருக்கு மட்டுமே பரிசுத்தொகை ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்படுவதாக தகவல் ரத்தினபுரி காவல் துறைக்கு…

  • கூட்டணி குறித்து எடப்பாடியாரும் நானும் தெளிவாக தெரிவித்துள்ளோம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து தாம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தெளிவாக கூறியிருப்பதை, அ.தி.மு.க பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை வலியுறுத்தினார். விவாதம் (Debate) ஏற்படுத்தவே சிலர் திட்டமிட்ட முறையில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். “நான் கூறிய கருத்துகளையும், எடப்பாடியார் தெரிவித்த கருத்துகளையும் திரித்து, வாதம் செய்யவே சிலர் முயற்சி செய்கிறார்கள். பாஜக குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன், அதேபோல் எடப்பாடியாரும் அ.தி.மு.க குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி…

  • அங்கம் முழுவதும் தங்கம் : விக்ரம் பிரபு ஜோடி பார்த்த கில்லாடி வேலை

    துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த 3ம் தேதி பெங்களூருவில் கைது செய்யபட்டார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது, விசாரணைக்காக ரன்யா ராவின் மொபைல்…

  • சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்… பிரபல ஜோதிடர் கணிப்பு

    ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இன்று துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று ஏபிரிவில் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, அரையிறுதியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கள் வெற்றிப் பயணத்தை நான்கு போட்டிகளாக மாற்றி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. எட்டு அணிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி…

  • மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம் – மத்திய இணை அமைச்சர் முருகன்

    தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கருப்பொருளில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகவலை மக்களிடம் கொண்டு சென்று, 1 கோடி கையெழுத்துகளை பெற்ற பின்னர், மே மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், இந்த ​இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க…

  • ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்​ சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

    கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கல்லூரி கலையரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். தேகா ஆர்கானிக்ஸ் நிறுவனர் ஆர்த்தி ரகுராம், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் மேம்பாட்டு மைய சாதனை மலரை…

  • ​ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின்  பத்தொன்பதாம் பட்டமளிப்பு விழா

    ​கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பத்தொன்பதாம் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமையேற்று அனைத்து பட்டதாரிகளையும் வாழ்த்தி, கல்வியில் சிறந்து முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார். மேலும் தனது உரையில், கல்விசார் சிறப்பு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிக்கும் பட்டதா​ரிகளை வடிவமைப்பதில் SRIT பெருமை கொள்கிறது என்று…

  • தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக சட்டப் பேரவையில் 2021-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறையின் அறிவிப்பின் படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்களிக்கும் நபர்களுக்காக ரூ.1 கோடி பரிசுத் தொகையுடன் பசுமை சாம்பியன் விருது 2021-2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விருது பெறுவதற்காக மாநில அளவில் 100 தனிநபர்கள்…

  • பாஜக கூட்டணியில் சேருவதற்காக அதிமுகவினர் முயற்சி செய்து வருகிறார்கள்- அண்ணாமலை

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “முன்னிலையில், பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று விமர்சித்தவர்கள் மற்றும் பாஜகவால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் எனக் கூறியவர்கள், இன்று பாஜக கூட்டணியில் சேருவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். தற்போதைய அரசியல் சூழலில், டிடிவி தினகரனை கூட்டணியில் இருந்து விலக்குவது சாத்தியமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். கூட்டணி தொடர்ந்து பலமடைந்து வருகிறது. உதயநிதி நடத்திய நீட் தேர்வுக்கு…