‘கோவை-சக்தி பசுமை வழிசாலை திட்டத்திற்கு எதிர்ப்பு!’; கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமை அறிவிப்பு

Spread the love

கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவை பத்திரக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அவர்கள், கோவை-சக்தி பசுமை வழிசாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இந்த திட்டத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டால் 70 சதவீத விவசாயிகள் பாதிக்கபடுவர் என்றும் சுற்று சூழலும் பாதிக்கப்படும் என்றும் கூறினர். விவசாய நிலத்தை எடுக்காமல் அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மாவட்ட திட்ட குழு, சாலை பாதுகாப்பு குழுவில் விவசாயிகள் யாரும் இல்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து விவசாய சங்க பிரதிநிதிகளை குழுவில் சேர்க்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கர்நாடாக உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு திட்டங்களை செயல்படுத்துவது போலவே தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். இருக்க கூடிய பழைய சாலையையே விரிவுப்படுத்தவதற்கு போதுமான இடம் உள்ளதாகவும் இது பசுமைவழிச் சாலை அல்ல பசுமை அழிப்பு சாலை என சாடினர்.

தொழில் அதிபர்கள் வாங்கி போட்டுள்ள பண்ணை வீடுகளுக்கு விரைவாக சென்று வர வேண்டும் என திட்டமிடுகின்றனர் என்றும், சுங்க சாவடி அமைத்து மக்கள் பணத்தை சுரண்டுவதற்கு இந்த தேவையில்லாத திட்டம் என்றும் சாடினர். இந்த பசுமைவழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் விவசாயிகள் பல உயிர்களை மாய்த்து கொள்வோம் எனவும் தெரிவித்தனர். மேலும், விவசாய நிலங்களின் பரப்பளவை குறைக்காத நிலையான உள்கட்டமைப்பு மேம்பாடு, போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.