இலவச வீட்டு மனை பட்டா: யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்னென்ன தகுதிகள் வேண்டும்?

Spread the love

கடந்த 2006 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டமானது தமிழ்நாடு அரசால் துவங்கப்பட்டது. அதன்படி, புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு தமிழ்நாடு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வருகிறது. இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு குறிப்பிட்ட நிபந்தனைகள் உள்ளது.

அதன்படி, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வசித்து இருக்க வேண்டும். நீர்நிலைகள், கோயில் நிலங்கள் போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படமாட்டாது. அவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் ஏற்பாடு செய்யப்படும்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில், வருவாய் கோட்ட அலுவலர், வட்டாட்சியர் மற்றும் நில அளவையர்கள் குழுவாக சரிபார்ப்பு மேற்கொண்டு உறுதி செய்யப்பட்ட பிறகு பட்டா வழங்கப்படுகிறது. இந்த நிலங்கள் பெரும்பாலும் புறம்போக்கு அல்லது அரசு நத்தம் நிலங்களாக இருக்கும். மாநகரப் பகுதிகளில் 1.25 முதல் 1.5 சென்ட் வரையிலும் கிராமப்புற பகுதிகளில் 2 முதல் 2.5 சென்ட் வரையிலும் பட்டா வழங்கப்படுகிறது.