தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பொள்ளாச்சியில் ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவின் போது வெவ்வேறு நாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணிக்கலாம். மேலும், பொள்ளாச்சியின் அழகை கண்டுகளிக்கலாம்.
இதனிடையே பலூன் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்வு வரும்16ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 8க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ராட்சத பலூன்கள் வர வழைக்கப்பட்டுள்ளன.
இந்த பலூன் திருவிழா, இந்தியாவிலேயே கோவையில் மட்டும் தான் நடத்தப்படுகிறது என்பது தனிச்சிறப்பு. இதில் பங்கேற்க தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply