பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு , கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கருணை இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கருணை இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர்
எஸ்.ஆர். சேகர் புத்தாடைகளையும், இனிப்புகளையும் வழங்கினார். பின்னர் அந்த வளாகத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக கிறிஸ்துவ பாடல்கள் பாடி பிரார்த்தனையுடன் நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பின்னர்
பாஜக மாநில பொருளாளர்
எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அண்ணாமலையின் 42 வது பிறந்தநாள் முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் செய்யப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக மனநல பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும் அவர்களுக்கு உதவிகள் செய்வதற்காக இன்று கருணை இல்லம் வந்திருக்கிறோம் என தெரிவித்தார்.
இந்தக் கருணை இல்லத்தில் மத ரீதியாக பார்க்காவிட்டாலும் கூட கிறிஸ்துவ பிரார்த்தனைகள் செய்து விழாவை துவக்கினார்கள் , இது பாராட்டுதலுக்கு உரிய விஷயம் என தெரிவித்தார்.
ஏனெனில்
ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு உலக நாடுகளுக்கு நமது நாட்டு எம்பிக்கள் குழுக்கள் சென்றது எனவும், பயங்கரவாதிகளை மட்டும் குறி வைத்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக அவர்கள் சென்று விளக்கினார்கள் எனவும் தெரிவித்தார். கட்சி, மதம் , ஜாதி பார்க்காமல் அனைத்து எம்பிக்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தோம் எனவும், தமிழகத்தில் இருந்து கனிமொழி உட்பட எம்.பிகள் பலர் சென்றனர் எனவும், இவர்கள் அனைவருமே அங்கு நாங்கள் இந்தியாவின் பிரதிநிதிகள் என்று சொன்னார்கள் என தெரிவித்தார்.
உங்கள் நாட்டின் மொழி என்னவென்று கேட்ட பொழுது , கனிமொழி அழகாக வேற்றுமையில் ஒற்றுமை எங்கள் மொழி என்று சொன்னார் எனவும், அதுதான் இன்று பிஜேபி எல்லா இடத்திலும் கடைப்பிடித்து வருகிறது எனவும், அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் இந்த கருணை இல்லத்தை தேர்வு செய்து , இங்கு வந்து அண்ணாமலை பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என தெரிவித்தார்.
இந்த வேற்றுமையில் ஒற்றுமையை நாட்டுக்குள் செய்ய வருகிறோம் எனவும் கனிமொழிக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.
கனிமொழியின் செயல்பாட்டை எங்களின் மாற்றத்திற்கு உதாரணமாக சொல்கிறேன் எனவும், தமிழகத்திற்குள் அரசியலில் நல்லது கெட்டது என்பதை விட அரசியல்தான் முன்னாள் நிற்கும் எனவும், ஆனால் நாடு என வரும் பொழுது அரசியலை பின்னுக்கு தள்ளி, நாட்டை முன்னுக்கு கொண்டு சென்றது கனிமொழிக்கு பாராட்டுதலை பெற்றிருக்கிறது எனவும் தெரிவித்தார்.
நாட்டின் மொழி என்ற கேள்விக்கு திறம்பட,
மிக அழகாக, நேர்த்தியாக, முதிர்ச்சியாக அவரது கட்சியின் செயல்பாட்டிற்கு மீறிய செயலாக, வேற்றுமையில் ஒற்றுமை என்று பேசியிருக்கிறார் எனவும், இதுதான் இந்த நாட்டின் ஜீவநாதம் என தெரிவித்தார். இதற்கு கனிமொழிக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.
அமித்ஷாவின் அடிக்கடி வருகை தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்துமா என்றால் அது உண்மையும் கூட என தெரிவித்த அவர், பாஜக தாமரை வரைபடத்துக்குள் தமிழ்நாடு வர வேண்டும் என்பது மத்திய பாஜகவின் எண்ணம், அது தமிழக பாஜகவின் செயல்பாடு என தெரிவித்தார். அமித்ஷாவின் ஒவ்வொரு விஜயமும் ஒரு வியூகத்திற்கான தொடக்கம் எனவும் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெறும் முருக பக்தர் மாநாடு, சங்கிகளின் மாநாடு என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு,
சேகர்பாபு பயத்தின் வெளிப்பாடு காரணமாக இப்படி பேசுகிறார் என தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஒவ்வொரு கடவுள் பக்தனும் சங்கீதான் எனவும், கடவுள் நம்பிக்கை இருப்பவன் சங்கீதான் எனவும் தெரிவித்த அவர், இதற்கு பெரிய விளக்கம் தேவையில்லை,
நடப்பது சங்கிகள் மாநாடுதான் , முருக பக்தர்கள் அனைவரும் சங்கிகள்தான் எனவும் எஸ் ஆர் சேகர் தெரிவித்தார்.
Leave a Reply