கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற 5 சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புது டெல்லியின் முன்னாள் யுபிஎஸ்சி உறுப்பினரும், செ ன்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந் தருமான இ.பாலகுருசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று, தேர்வில் வெற்றி பெற்ற வணிக வரி உதவி ஆணையர் மதுவர்ஷினி, கிராமப்புற மேம்பாட்டு உதவி இயக்குநர் ஹர்ஷா மற்றும் டிஎஸ்பி பியூலா வயலட் ஆகியோரைப் பாராட்டினார்.
அரசு ஊழியர்களாக மாற விரும்புவோர் புறநிலையாக முடிவுகளை எடுக்கவும், சமூகத்தின் கோரிக்கைகள்/பிரச்சினைகளுக்கு விரைவாக பதிலளி ப்பவராகவும், பணியில் மிகுந்த வெளிப்படைத் தன் மையைக் கடைப்பிடிக்கவும், பொறுப்புணர்வுள்ள நபராக இருக்கவும் கேட்டுக்கொண்டார்.
தங்கள் வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லக் கற்றுக்கொள்ளவும், எப்போதும் ஒழுக்க ரீதியாகவும், நெறிமுறை ரீதியாகவும் வலிமையான நபராக இருக்கவும் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில், கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் மையத் தலைவர் அருண் செந்தில்நாதன் மற்றும் விருந்தினர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

Leave a Reply