சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பப்பட்ட இ-மெயிலில், எதிர்காலத்தில் இங்கு ஐ.பி.எல். போட்டி நடைபெறுமாயின் மைதானத்தில் வெடிகுண்டு வைத்து அழிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி சராசரி செயல்பாடுகளால் புள்ளி பட்டியலில் பின்தள்ளப்பட்ட நிலையில், அணியின் வீரர்கள் மற்றும் மேலாளர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. போட்டிகளை காண வருவோரின் எண்ணிக்கையிலும் சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பிரபல நடிகர்கள் வருகை தந்து ரசிகர்களை கவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் வந்துள்ள இந்த மிரட்டல், ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று, டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply