பெட்டிக் கடைக்கு சீல் வைக்கப்பட்டதால் கோவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி

suicide
Spread the love

கோவை, தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன் பாளையம் காந்தி வீதியை சேர்ந்த அங்கம்மாள் (60). பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று தொண்டாமுத்தூர் காவல் நிலைய போலீஸ் உதவி ஆய்வாளர் கார்திகையேன் உணவு பாதுகாப்பு அதிகாரி நரசிம்மன் ஆகியோர் இவரது பெட்டிக் கடையில்  சோதனை நடத்தி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கு  பொருட்கள் 224 கிராம்  கைப்பற்றி உள்ளனர்.   கடைக்கு சீல் வைத்து சென்று உள்ளனர். இதனால் மன உலச்சலில் அங்கம்மாள் இருந்து வந்து உள்ளார். வாழ்வாதாரமாக இருந்த பெட்டிக்கடை சீல் வைக்கப்பட்டது பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறி இரவு முழுவதும் புலம்பி உள்ளார்.‌

இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் வீட்டின் மின் விசிறியில் சணல் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் அவரது மகன் ஆனந்த புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.