இன்றைய சூழலில் இயற்கையை பாதுகாப்பது எல்லோரது கையில் உள்ளது. எண்ணற்ற வளங்கள் அடங்கிய இந்த உலகில் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களால் துயரங்கள் பல்கி பெருகி வருகின்றன. இத்தகைய நிலையை மாற்ற முற்றிலும் 100 சதவித இயற்கைப் பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் புதிய முன்னோடியாக எளிதில் மக்கக்கூடிய ‘தேநீர் கப்’ தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் கோவை இளம் தொழிலதிபர்.
இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே நெகிழிக்கு (பிளாஸ்டிக்) மாற்றாக தேநீர் கப், காற்று புகாத குடுவை உள்ளிட்ட எண்ணற்ற பொருட்களை உரு
வாக்க இயந்திரத்தை தயாரித்து உள்ளார் இவர். நெகிழிப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கெடுதல் விளைவிக்கிறது. இதனால் அவற்றை அரசு தடைசெய்து உள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான மைக்ரான் கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இவற்றை அழிக்கவே குறைந்தது ஆண்டுகள் பல ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ‘மீண்டும் மஞ்சள் பை’ பிரச்சார தொடக்கத்தின்போது நடந்த கண்காட்சி பற்றி தமிழக சுற்றுச்சூழல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, கோவை இளம்தொழிலதிபர் எஸ்.கல்யாணகுமாரைப் பற்றி, தனது பதிவில், “மாற்றுப்பொருட்களை உற்பத்தி செய் வதில் ஈடுபட்டுள்ளவர்களை கண்காட்சிக்கு அழைத்தோம். அவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள சுவாரஸ்யமான கதைகள் இருந்தன. உணவுப் பாத்திரங்கள் மற்றும் தேநீர் கோப்பைகள் தயாரிக்க அரிசி தவிடு பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது. மாவட்ட நிர்வாகங்கள் இந்த தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிப்பதால் இது போன்ற முயற்சிகள் எங்களுக்கு உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் தனது தந்தையின் இயந்திரங்களை வடிவமைக்கும் தொழிலில் சேர்ந்தார் எஸ்.கல்யாணகுமார். இயற்கைக் கழிவுகளில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் உபகரணங்களை உருவாக்குவதில் மும்முரம் காட்டினார். சேலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தடம் பதித்தார் கோவையில்.
இவர் வடிவமைத்த இயந்திரத்தில் அரிசி, கோதுமை தவிடு, வாழைஇலை, கிழங்குகள், தினைக்கழிவுகள், புளிவிதைகள், நிலக்கடலை ஓடு, வைக்கோல் மற்றும் பிற கரிம கழிவுகள் மற்றும் கூழ்போன்ற மூலப்பொருட்களை பயன்படுத்தலாம். மூலப்பொருட்களின் கிடைக்கும் தன்மையைப்பொறுத்து, அவற்றை மாற்றுவதற்கான நெகிழ்வுத் தன்மை
யையுடன் பொருட்களைத் தயாரிக்கும் தீர்வும் உண்டு என்பதுதான்.
நெல்உமி, வாழைப்பழக் கழிவுகள் மற்றும் மரக்கூழ் போன்ற 20 மக்கும் கரிமக் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி, பத்து வகையான ஒற்றைப் பயன்பாட்டுப் பொருட்களை வெளியிடுவதற்கு அவருடைய உபகரணங்களின் வரம்பு உதவுகிறது.
ஐந்து வகையான டீ கப்கள், நான்கு வகையான ஜூஸ் மற்றும் ஒயின் கிளாஸ்கள், தண்ணீர் பாட்டில்கள், வழக்கமான பிளாஸ்க், காற்றுபுகாத குடுவை, பல்வேறு அளவுகள் மற்
றும் தரம் கொண்ட உணவுப் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்டு, கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு எளிதில் மக்கும் தன்மைகொண்டவை.
‘ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பாக்குஇலையில் இருந்து பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கி
னோம். ஆனால் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு சவாலாக இருந்தது. நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பின் பல கரிம கழிவுப்பொருட் களைப் பயன்படுத்தத் தொடங்கினோம்’ என்றார் கல்யாண்குமார்.
தங்களது இயந்திரத்தால் தயாரிக்கப்படும் பொருட்கள் பற்றி அவர் கூறுகையில், “கிலோ 14 ரூபாய்க்கு வாங்கும் நெல் உமியைப் பயன்படுத்தி 30 டீ கப் தயாரிக்கலாம். உற்பத்திச் செலவில் கப் ஒன்றுக்கு 65 பைசா என்ற காரணியாக, சில்லறை சந்தையில் ஒவ்வொரு கோப்பையும் ரூ.1.50க்கு விற்கலாம். (அரசால்அங்கீகரிக்கப்பட்ட பேப்பர் கப் ஒன்று 1.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது) வாழைஇலைக் கழிவுகளைப் பயன்படுத்தினால், இந்தக் கோப்பைகளை இன்னும் குறைந்த விலையில் செய்யலாம். மூலப்பொருள் மற்றும் தரத்
தைப் பொறுத்து விலையை மாற்றியமைக்கலாம்” என்றார் குமார்.
நகரப் பகுதியில் கிடைக்கும் பொருட்களுக்கு ஏற்ப அதாவது கரும்புச் சக்கை, வாழை இலை, கோதுமை தவிடு, புளியங்கொட்டை போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கும் தேநீ்ர் கப் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்கிறோம்.
அதே நேரத்தில் கிராமப்பகுதி யில் கிடைக்கும் அரிசி தவிடு, உமி போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கும் இயந்திரங்களையும் தயாரித்து அவர்களுக்குத் தருகிறோம்.
மூலப்பொருட்களின் தன்மையைப் பொறுத்து தேநீ்ர் கப் விற்பனை விலை ரூ.2 முதல் ரூ.10 வரை விற்பனையில் உள் ளன. தயாரிக்கும் பொருட்கள் இயற்கைக்கு கேடு விளைவிக்
காதவை. தற்போது, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் வீசியெறியப் படும் பிளாஸ்டிக் கப் பை போன்றவற்றை உட்கொள் கின்றன. அமிலங்களால் தயாரிக்கப்பட்டவையால் அதுதரும் பால்கூட உடல்நலத்திற்கு கேடு தான். ஆனால் புண்ணாக்கு, தவிடு போன்றவற்றால் தயாரிக்கப்படும் டீ கப் கிளாஸ்கள் உள்ளிட்டவை குப்பைக்கு போனாலும் அவற்றை உண்ணும் கால்நடைகளுக்கு தீங்கு இல்லை. அதற்கு அது உணவாகவே மாறிவிடும் நன்மை உள்ளது.
எஸ்.பி.எஸ்.கல்யாண் மெஷின் டிசைனர் நிறுவனத்தின் தலைவர் எஸ்.கல்யாண்குமார் மேலும் கூறியதாவது:
நாங்கள் உற்பத்தி செய்யும் தேநீர் கப்புகள் எளிதல் மக்கக் கூடியவை. இவை சுற்றுச் சூழலின் பாதுகாப்பின் புதிய முன்னோடியாக திகழ்கின்றன. பிளாஸ்டிக் போல் நீண்ட காலம் நிலைத்து மாசு படுத் தாமல், இயற்கை யில் சில மாதங்களில் கலந்து விடுகின் றன. மரத்தை வெட்டி காட்டை சேதப்படுத்தும் பேப்பர் கப்புகளுக்கு மாற்றாகும். பூமியின் மாசு
பாட்டை குறைக்கும் வகையில் இயற் கைப் பொருட்கள் கொண்டு உருவாக்கப்படுவது இதன் சிறப்பு. விஷமற்ற விவசாய உற்பத்தி பிணைவுகளையும் பயன்படுத்தி தயாரிக்கும் இவை அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இவை உணவகங் கள், தேநீர் கடைகள், வீட்டுவிசேஷங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பம்வாய்ப்பையும், வருமானத்தையும் உருவாக்குகிறது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு உணவு எடுத்துச் செல்ல பயன்படும் டிபன் பாக்ஸ் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கி உள்ளோம்.‘யானை பொம்மை’ புதிய முயற்சியாக தற்போது குழந்தைகளுக்கான யானை பொம்மையை தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து வருகிறோம். 100 சதவீத வேளாண் பொருட்களைக் கொண்டு இந்த பொம்மையை தயாரிக்கலாம். குழந்தைகள் உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. வீசியெறிப்பட்டாலும் அவை கால்நடைகளுக்கு உணவாகும் என்கிறார் எஸ்.கல்யாண்குமார்.
எஸ்.கல்யாணகுமார்
தொடர்பு கொள்ள 95977 15496
Leave a Reply