இன்றைய தினம் தமிழர்களின் பாரம்பரிய திருநாளான தமிழ் புத்தாண்டு – சித்திரைத் திருநாள் – உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு மக்கள் தங்களது இல்லங்களில் முக்கனிகள் மா, பலா, வாழையை வைத்தும், மேலும் பல்வேறு பழங்களை சேர்த்தும் வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள். இதே போன்று கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
கோவையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோவில், ஆசியாவில் உயரமான விநாயகர் சிலையைக் கொண்டதாகும். சித்திரைத் திருநாளை முன்னிட்டு, மா, பலா, வாழை மட்டுமின்றி, அண்ணாச்சி, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் போன்ற பல்வேறு பழங்களால் விநாயகர் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு டன் எடையுடைய பழங்கள் இந்த அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பக்தர்கள் அதிகாலை முதலே தரிசனம் செய்வதற்காக திரண்டுவருகின்றனர். இதேபோன்று கோவையின் அனைத்து முக்கிய கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்கள் பக்திபூர்வமாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Leave a Reply