உலக பணக்காரர்கள் பட்டியல் – முதன்முதலாக இடம் பிடித்த தமிழக பூர்வீக பெண்

Spread the love

உலக அளவில் மிகுந்த செல்வம் கொண்டவர்களை பட்டியலிடும் ஹுருன் அமைப்பு, இந்த ஆண்டு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, உலகம் முழுவதும் 3,442 பில்லியனர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த பட்டியலில், 420 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேலும், 400 பில்லியன் டாலர் மதிப்பை கடந்த ஒரே நபர் என்ற பெருமையும் அவருக்கே சொந்தம்.  அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 266 பில்லியன் டொலருடன் இரண்டாம் இடத்திலும், மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க் 242 பில்லியன் டொலருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளார். பட்டியலில் முதல் 10 இடங்களில் 9 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். பிரான்ஸைச் சேர்ந்த லூயி வுய்டன் நிறுவன தலைவர் பெர்னார்ட் அர்னால்ட், 7வது இடத்தில் உள்ளார்.

முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பில் 13% சரிவினைச் சந்தித்தபோதிலும், ரூ.8.6 லட்சம் கோடிகளுடன் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார்.  கௌதம் அதானி, ரூ.1 லட்சம் கோடி உயர்வு கண்டுள்ளதுடன், 8.4 லட்சம் கோடிகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். எச்.சி.எல். நிறுவன தலைவர் ரோஷினி நாடார், ரூ.3.5 லட்சம் கோடிகளுடன் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.  மேலும், உலகளவிலான பணக்கார பெண்கள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்ததன் மூலம், முதன்முறையாக டாப் 10 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய பெண்ணாவார்.

சமீபத்தில், எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார், தனது 50% பங்குகளில் 47% பங்குகளை தனது மகளான ரோஷினி நாடாருக்கு வழங்கியுள்ளார்.  தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த ஷிவ் நாடார், 2010 ஆம் ஆண்டு ஷிகர் மல்ஹோத்ராவுடன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.