மருதமலை முருகன் கோயிலில் ஏப்ரல் 4-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது

Spread the love

கோவை

Maruthamalai temple
Maruthamalai temple

. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. யாகசாலை அமைத்தல், வர்ணப்பூசும் பணிகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் வேகமாக நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், அறங்காவலர் குழுவினர் அவர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 5 மணி முதல் யாகசாலையில் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு கோயிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் சக்தி கலசங்களை வைத்து பூஜைகள் செய்யப்பட உள்ளன. இதனால், ஏப்ரல் 3-ஆம் தேதி வரை பக்தர்கள் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசிக்கலாம்.

ஏப்ரல் 4-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததும், பக்தர்கள் வழக்கமான முறையில் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை மூன்று நாட்களுக்கு மலைப்பாதையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.

பக்தர்கள், படிக்கட்டு வழியாகவும், கோவில் பேருந்துகள் மூலமாகவும் மலைக்கோயிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *