, , , ,

கோவை நேரு பொறியியல் கல்லூரியில் மாணவர் மீது கொடூர தாக்குதல் – சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ!

violence
Spread the love

கோவை, பாலக்காடு சாலையில் அமைந்துள்ள நேரு தனியார் பொறியியல் கல்லூரியில், ஒரு முதலாம் ஆண்டு மாணவர், சீனியர் மாணவர்களால் விடுதியில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கல்லூரி விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர், ஒரு சீனியர் மாணவரை இரவு முழுவதும் தாக்கி, கொடுமைப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பணம் எடுத்ததாக குற்றம் சாட்டி, அவரை மண்டியிட வைத்துச், கைகளை உயர்த்த சொல்லி தாக்குதலை தொடர்ந்து உள்ளனர். இதில் மாணவர் பலத்த காயங்களுடன், வலியால் கதறியும், விநதியகளித்தும், தாக்குதல் முடிவடையவில்லை. இந்தக் கொடூர சம்பவம் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் வெளியாகிய பின்னர், கல்லூரி நிர்வாகம் முதலாம் ஆண்டு மாணவர்களில் 13 பேரை இடைநீக்கம் செய்துள்ளது. இது, கல்லூரிகளில் மாணவர்கள் இடையே நீடிக்கும் வன்முறைக் கலாச்சாரத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.