அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களின் அறிவைப் பெருக்கிக் கொள்ள மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழகத்தை ஆண்ட புரட்சித்தலைவி ஜெயலலிதா கொண்டு வந்து செயல்படுத்தினார். இதனால் உயர் வகுப்பில் சேருவதற்கும், சர்வதேச அறிவைப் பெருக்கிக் கொள்வதற்கும் மாணவர்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது.
2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அத்திட்டத்தை கைவிட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன.
நிதி நிலைமை சரியான பின்பு வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நமது கோவை ஹெரால்டு இதழில் செய்தியும் வெளியானது. இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் கலை அறிவியல், விவசாயம்,பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்குஅவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கனிணி அல்லது மடிக்கணினி 20 லட்சம் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும் எனவும், இதற்காக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கணினி… பட்ஜெட்டில் அறிவிப்பு – அன்றே கணித்த தி கோவை ஹெரால்டு

Leave a Reply