, , ,

ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர்

kodanadu estate
Spread the love

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள், சி.பி.சி.ஐ.டி போலீசாரின் சம்மனுக்கு இணங்க செவ்வாய்க்கிழமை ஆஜராகியுள்ளார்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஜனவரி 19 அன்று சசிகலா கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்தபோது, பங்களாவின் அறைகளை பார்வையிட்ட பிறகு ஏதேனும் கேள்விகள் எழுப்பியாரா என போலீசார் கேட்டனர். ஆனால், சசிகலா எந்த கேள்வியும் எழுப்பவில்லை என நடராஜன் தெரிவித்தார். மேலும், கணினி ஆப்பரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை தொடர்பாகவும் நடராஜனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்த நாள் மாலை விசாரணை நிறைவடைந்தது.

இந்நிலையில், வீரபெருமாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, மார்ச் 11 அன்று நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மற்றும் அவர் தனது சொல்போனை ஒப்படைக்காதது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இன்று காலை, வீரபெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.