கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், அறிவியல் மன்றம் சார்பில், தேசிய அறிவியல் தின விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார்.
பாரதியார் பல்கலைக்கழக வளாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி முனைவர் கே.கதிர்வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து, அறிவியல் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஹேக்கத்தான், பென்சில் ஓவியம், புகைப்படம் எடுத்தல், அறிவியல் உண்மைகள் வெளிப்படுத்துதல், அறிவியல் ரீல்ஸ் எடுத்தல், சுடுக்கோ, ரங்கோலி கோலமிடுதல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
முன்னதாக அறிவியல் மன்றத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் வி.சதீஷ்குமார் வரவேற்றார். முடிவில் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏ.சஹானா பாத்திமா நன்றி கூறினார். இவ்விழாவில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply