அதிமுக தலைமையகத்தில் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர். கட்சி அலுவலகத்தில் ஜெ., உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் சிலைக்கு, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அவர் 77 கிலோ கேக் வெட்டி, தொண்டர்களுக்கு வழங்கினார். அப்போது , தமிழக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
Leave a Reply