, , ,

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – 7 பேர் கைது

pocso
Spread the love

கோவையில் 17 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானதாக அவரது பாட்டி உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மறுநாள் சிறுமி வீட்டிற்கு திரும்பிய பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டது.

​சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்ட கல்லூரி மாணவர்கள், சிறுமியை குனியமுத்தூரில் தாங்கள் தங்கியிருந்த விடுதி அறைக்கு அழைத்துச் சென்றதுடன், அங்கு ஏழு பேர் கூட்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

ஆரம்பத்தில் சிறுமி மாயமானதாக வழக்கு பதிவு செய்த போலீசார், பின்னர் அதை போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றியுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய​வர்களை பற்றி அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.