அமெரிக்காவில் இது நாள் வரைக்கும் அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே கிரீன் கார்டு கிடைத்து விடும். இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், அந்த சட்டத்தை ரத்து செய்தார். பிப்ரவரி 20 ஆம் தேதியோடு இந்த சட்டம் காலாவதியாகிறது. இதனால், அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் பதறி போய் இருக்கின்றனர். தற்போது, 8 அல்லது 9வது மாதத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் சிஷேரியன் மூலம் குழந்தைகளை வெளியே எடுக்க முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில், குறை பிரசவத்தில் கூட குழந்தைகளை வெளியே எடுக்க பெற்றோர் முடிவு செய்து மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.
மற்றொரு டாக்டரான முக்காலா கூறுகையில், குறை பிரவசத்தில் குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து எடுப்பது ஆபத்தானது. நுரையீரல் முழுமையாக வளர்ந்திருக்காது. குறைந்த எடை நரம்பு மண்டலத்தில் பிரச்னைகளை உருவாக்கும் என்று கூறி 15 கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பியுள்ளேன் என்கிறார்.
முன்னதாக, அமெரிக்காவில் பெற்றோர் அந்த நாட்டு குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்கு பிறக்கும் குழந்தைள் தானாகவே அந்த நாட்டு குடிமகனாகி விடும் நிலை இருந்தது. பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு பிறகு பிறக்கும் குழந்தைகள் அந்த நாட்டில் நிரந்தரமாக வசிக்க முடியாத நிலை ஏற்படும். பல சலுகைகளும் ரத்தாகி விடும் நிலை உருவாகியுள்ளது.
Leave a Reply