பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் ஆண்டுக்கு 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் அதனை பொருட்படுத்தாமல் பட்ஜெட்டை வாசித்தார் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் .
எனினும் நிர்மலா சீதாராமன் கூறுகையில், அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்த அரசு பயணித்து வருகிறது மிகப்பெரிய மாற்றமாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதாவது மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் அதாவது ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்று அறிவித்தார்.
Leave a Reply