, ,

இப்போதும் இந்தியாவில் ஒரு மன்னர் இருக்கிறார்… யார் அவர்?

king
Spread the love

 

இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு 70 ஆண்டுகளாகி விட்டது. எனினும், பல சமஸ்தானங்கள் இன்னும் அதே பெயருடன் இருக்கின்றன. ராமநாதபுரம் சமஸ்தானம் போன்றவற்றில் இப்போதும் அவர்களின் வாரிசுகள் உள்ளன. ஆனால் , இந்தியாவில் இப்போது உண்மையிலேயே ஒரு மன்னர் இருக்கிறார். அவரின் பெயர் மன்னர் ராஜாமன்னன். கேரளாவில் மன்னன் என்ற ஆதிவாசி மக்களுக்கு இவர்தான் மன்னர்.

இடுக்கி மாவட்டத்தில் கோழிமலை என்ற மலைபகுதியில் இந்த மன்னர் சமுதாய மக்கள் வசிக்கின்றனர். மொத்தம் 48 ஆதிவாசி கிராமங்களுக்கு இவர்தான் மன்னர். தென்னிந்தியாவில் இப்போது எஞ்சியிருக்கும் ஒரே மன்னர் இவர்தான். கடந்த 2012 ஆம் ஆண்டு ஆர்ய ராஜ மன்னன் என்பவர் மறைந்த பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார். மன்னர் சமுதாயத்தில் கல்லூரி சென்று பட்டம் பெற்ற ஒரே நபர் இவர்தான். எர்ணாகுளம் மகாராஜ கல்லூரியில் ராஜா மன்னன் பி.ஏ. பொருளதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

மன்னர் ராஜா மன்னனுக்கு நாளை டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பை கேரள பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஓ.ஆர்.கேலு நேரில் சென்று அழைப்பிதழை மன்னரிடம் வழங்கினார். இதையடுத்து, ராஜா மன்னரும் அவரின் மனைவியும் குடியரசு தின விழாவில் பங்கேற்றனர்.