, , ,

உலகிலேயே மோசமான மாத்திரை பாராசிட்டமாலா? வீடியோ வெளியாகி பரபரப்பு

paracetamol
Spread the love

சமீபத்தில் @behind_of_truth.ing என்ற இன்ஸடா பக்கத்தில் ஆயுல்வேத நிபுணரான ஆச்சார்யா மாணீஷ் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், காய்ச்சலுக்கு பாராசிட்டமால், டோலோ போன்ற மாத்திரைகளை பயன்படுத்தாதீர்கள் உங்கள் கிட்னி, கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை 3 கோடி பேர் பார்த்திருந்தனர். 10 லட்சம் பேர் லைக் செய்திருந்தனர்.

அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்த விஷயம் என்னவென்று பார்க்கலாம்.’ உங்களுக்கு காய்ச்சல் வந்தால் பாராசிட்டமால் மாத்திரைய எடுக்காதீர்கள். உலகின் மோசமான மாத்திரை பாராசிட்டமால். 40 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. உங்கள் கிட்னி, கல்லீரல் பாதிக்க இந்த மாத்திரை காரணமாக இருக்கும் .

இந்த மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக சுடுநீரில்  (40–42°C),மூட்டு வரை கால்களை நனைய வைத்து கொண்டு 40 நிமிடங்கள் இருந்தால், காய்ச்சல் குணமடைய 90 சதவிகித வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார். இவரது வீடியோ இணையத்தில் பரவி பரவலாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனென்றால், இந்தியாவில் காய்ச்சல் என்றால் பாராசிட்டமால் மாத்திரைகள்தான் டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். பல மக்களும் தாங்களாகவே பாராசிட்டமால் மாத்திரையை வாங்கி போட்டு கொள்ளும் பழக்கமும் இருக்கிறது.

ஆனால், ஆச்சார்யா மாணீஷ் சொன்ன குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா? என்று ஆராய்ந்தால் நிச்சயமாக இல்லை. இது தவறான தகவல் ஆகும்.பெரியவர்களுக்கு பாராசிட்டமால் பாதுகாப்பானது. நாள் ஒன்றுக்கு 4 கிராம் வரை பராசிட்டமால் எடுத்து கொள்ளலாம். ஓவர்டோஸ் மட்டுமே உறுப்புகளை பாதிக்கும்.ஆனால், ஆரோக்கியமான பெரியவர்களில் 4 கிராமுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் போது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓவர்டோஸ் நிச்சயமாக கல்லீரல் மற்றும் கிட்னியை பாதிக்கும் என்பது மட்டுமே உண்மை.