கோவை-பெங்களூரு இடையேயான தமிழ்நாட்டின் 4-வது வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்கப்பட்டது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் இருந்து இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூர் வரை செல்லும் 8 ரயில் பெட்டிகள் கொண்ட கோவை-பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையை அயோத்தியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.
இதனை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ குமார், பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகள்,பயணிகள் சென்றனர். இந்த ரயில் சேவை ஜனவரி 1-ம் தேதி முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு செயல்படும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக காலை 11:30 மணி அளவில் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணி அளவில் கோவை திரும்பும்.
கோவை – பெங்களூரு இடையிலான 380 கிலோமீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் சாதாரண சேர் கார் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் குறைந்த பட்சம் ரூ. 1000ம், எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட் குறைந்தபட்சம் 1850 ஆகவும் இருக்கும் எனத் தெரிகிறது : தற்போது கோவை – பெங்களூர் ரூட்டில் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்ல 6 மணி நேரம் 45 நிமிடம் எடுத்துக் கொள்கிறது புதிய வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தால் சுமார் 1 மணி நேரம் 5 நிமிடம் மிச்சமாகும்.
இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். மேலும் இந்த ரயில் சேவை வியாழக்கிழமைகளில் இருக்காது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Leave a Reply