, ,

யாருடனும் பழக மாட்டார்’- ஏ.ஆர். ரஹ்மான் பற்றி பிரபல பாடகர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ar rahman
Spread the love

பிரபல பாடகர் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் தன் மனைவியை பிரிந்தார். அப்போது, இது பெரும் விவாத பொருளாகியது. பலரும் பல விதமான கருத்துக்களை இணையத்தில் பேசி வந்தனர். தற்போது, இந்த விவகாரம் முற்று பெற்றுள்ள நிலையில் பிரபல இந்தி பாடகர் ஏ.ஆர் ரஹ்மான் பற்றி அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

நீண்ட காலமாக ஏ.ஆர். ரஹ்மானுடன் பணியாற்றியுள்ள சோனு நிகம் O2 இந்தியாவிடத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தாவூத் படத்தில் முதன் முதலாக அவருடன் பணியாற்றினேன். வழக்கமாக இசையமைப்பாளர்கள் பல அறிவுரைகள் பாடல் பதிவின் போது வழங்குவார்கள். மாற்றி படிக்க கூறுவார்கள். ஆனால், ரஹ்மான் என் விருப்பப்படி பாட அனுமதித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் அவர் யாருடன் டீப்பாக பழக மாட்டார். உறவு முறைகளுக்குள் அடங்க மாட்டார். யாரையும் பற்றி கேட்டு தெரிந்து கொள்ள மாட்டார். தன்னை பற்றியும் எதுவும் பகிர்ந்து கொள்ள மாட்டார். ஒரு வேளை திலீப் குமார் என்ற பழைய பெயர் இருந்த போது இருந்த பழைய நண்பர்களுடன் ஜோவியலாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ரஹ்மான் ஃப்ரெண்டிலியான மனிதர் இல்லை. அவருக்கு வேலை மட்டும்தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.