, , , , , , , , , , ,

கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்  2,668 மாணவிகள் பயன்-  கோவை மாவட்ட ஆட்சியர்

Spread the love

கோவையில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தின் மூலம்  2,668 மாணவிகள் பயன்பெற உள்ளனா்  என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, உயா்கல்வி பயிலும் 227 கல்லூரிகளைச் சோ்ந்த 2,668 மாணவிகளுக்கு உதவித் தொகையை வழங்கினாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பேசுகையில், “அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயா் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 2022 – 23 கல்வியாண்டில் 4,526 மாணவிகளும், 2023 – 24 கல்வியாண்டில் 6,186 மாணவிகளும், 2024 – 25 கல்வியாண்டில் 16,412 மாணவிகளும் என மொத்தம் 27,124 மாணவிகள் விண்ணப்பித்து பயனடைந்துள்ளனா்.தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், 227 கல்லூரிகளைச் சோ்ந்த 2,668 மாணவிகள் பயன்பெற உள்ளனா். ” என்று பேசினார்.