தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். ராமதாஸ் – அன்புமணி இடையே நடைபெறும் சந்திப்பில் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பாமக எம்.எல்.ஏ. அருள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் , “இந்த சந்திப்பில் என் கோரிக்கையை தலைவர் ஏற்று கொண்டார்.
அடுத்த கட்டம் என்னென்ன போராட்டங்கள் எந்தெந்த பகுதியில் நடத்தலாம் என்று ஆலோசனை நடத்தினோம். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. ஜனநாயக கட்சியில் நடக்கின்ற பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடந்தாலும் எங்களுக்கு ஐயா ஐயா தான். இந்த உள் கட்சிப் பிரச்சினை குறித்து யாரும் பேச வேண்டாம். என்று அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

Leave a Reply