பற்கள் தொடர்பான சிகிச்சையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய அப்போலோ ஐவரி பல் சிகிச்சை மையத்தை பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்து வைத்தார்..
பற்கள் தொடர்பான அனைத்து வகை சிகிச்சைகள் மற்றும் பற்களை அழகு படுத்தும் நவீன சிகிச்சைகளை வழங்கும் விதமாக புதிய அப்பல்லோ ஐவரி பல் மருத்துவமனை கோவை திருச்சி பிரதான சாலை சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ எதிரில், கிருஷ்ணா காலனி பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டு புதிய பல் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். புதிதாக துவங்கப்பட்டுள்ள அப்போலோ ஐவரி பல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் காயத்ரி நடராஜன், மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலர் ராம்குமார் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பற்கள் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்டு இந்த மருத்துவமனை செயல்பட உள்ளதாகவும், இங்கு சிறு குழந்தைகள் துவங்கி வயதான முதியவர்கள் வரை அனைவருக்கும் பிரத்யேக தனி கவனம் செலுத்தி அனுபவம் வாய்ந்த மருத்துவ குழுவினரை கொண்டு சிகிச்சை அளிக்க இருப்பதாக தெரிவித்தனர்.
குறிப்பாக டென்டல் இம்ப்ளாண்ட்ஸ்,
ரூட் கேனல் சிகிச்சை,
கம் சிகிச்சை,உள்ளிட்ட பற்கள் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் மேலும் ,தற்போது இளம் வயதினர் பற்கள் சீரற்ற வரிசையில் இருப்பதை சரி செய்து தங்களது முக அழகை மேலும் அழகு படுத்த நவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்டு சிகிச்சை வழங்கும் வசதிகளும் இங்கு இருப்பதாக தெரிவித்தனர்.
அப்போலோ ஐவரி பல் சிகிச்சை மையம் கோவை சிங்காநல்லூரில் துவக்கம்

Leave a Reply