கோவை மாநகராட்சி 47 வது வார்டு கவுன்சிலரும் அ.தி.மு.க. குழுத்தலைவர் ஆர்.பிரபாகரன், மாநகராட்சி கமிஷனரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:
மேட்டுப்பாளையம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முருகன் மில் முதல் சி.டி.சி.டிப்போ வரை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பாலத்தின் இடைப்பட்ட பகுதிகளான சாய்பாபா காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 15 குறுக்கு சாலைகள் உள்ளன. தற்போது உள்ள திட்டத்தின்படி இந்த பாலத்தை கட்டினால் மேட்டுப்பாளையம் ரோடு அவினாசிலிங்கம் கல்லூரி மற்றும் சங்கனூர் ரோட்டுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கடினமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மேட்டுப்பாளையம் ரோடு அன்னபூர்ணா ஓட்டல் முதல் சங்கனூர் காவலர் செக்போஸ்டு வரையிலான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் வியாபாரிகளும் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த பாலத்தை நகரின் எதிர்கால போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் அன்னபூர்ணா ஓட்டலில் இருந்து சங்கனூர் காவலர் செக்போஸ்ட் வரை நீடித்தால் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். எனவே கோவையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. மாமன்ற குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் பயன்பெறும் வகையில் இந்த பாலத்தை அமைக்க நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரைக்க
வேண்டுமென அ.தி.மு.க. மாமன்ற குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம் ரோடு, அன்னபூர்ணா ஹோட்டல் முதல் சங்கனூர் செக்போஸ்ட் வரை ஒரே பாலம் தேவை! கவுன்சிலர் ஆர்.பிரபாகரன் உறுதியான கோரிக்கை

Leave a Reply