எஸ்பிசி பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில், கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சத்தி சாலை, ஆம்னி பேருந்து நிலையம் எதிரேயுள்ள, பெத்தேல் மாநகரப் பேராலயத்தில் டிச.18ம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
“ஒட்டுமொத்த உலகையே மகிழ்விக்கும் விழா என்றால் அது நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும்தான். அதுவும் கிறிஸ்துமஸ் என்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.
நான் படித்தது டான் போஸ்கோ பள்ளியில், லயோலா கல்லூரியில் மேற்படிப்பு படித்தேன். சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ‘நானும் ஒரு கிறிஸ்தவன் என்பதை பெருமையாக சொல்கிறேன்’ என்று கூறியிருந்தேன்.
அது உடனே பல பேருக்கு வயிற்றெரிச்சலை கொடுத்தது.
இன்று மீண்டும் உங்கள் முன்னால் சொல்கிறேன். அதை சொல்வதில் நான் மிகவும் பெருமையும் கொள்கிறேன். நான் ஒரு கிறிஸ்தவன் தான்.
நீங்கள் என்னை முஸ்லிம் என நினைத்தால் நான் முஸ்லிம். நீங்கள் என்னை இந்து என நினைத்தால் நான் இந்து. நான் எல்லாருக்கும் பொதுவானவன்.
வெறுப்பை பரப்புபவர்கள் உண்மையை பேச மாட்டார்கள்.
உண்மைகளை பேசி வெறுப்பை பரப்ப முடியாது. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து பொய்யை நம்பி, பொய்யை மட்டும் பரப்புகின்றனர்.
மாநிலத்தின் உரிமைகளை ஒழித்துக் கட்ட, மத்திய அரசு கொண்ட வந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கும் அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. வெளிவேஷசத்துக்காக தான் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
உள்ளுக்குள் உண்மையாகவே அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட அதிமுகவை சில சிறுபான்மை அமைப்புகள் நம்புவது எனக்கு கவலையை தருகிறது.
தமிழ் மண்ணில், திமுக இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்காக என்றைக்கும் பாதுகாப்பாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நான் கிறிஸ்தவன்தான் – கோவை விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Leave a Reply