, , , , , , ,

ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பாரதியாரின் 143வது பிறந்தநாள் விழா

Spread the love

ஶ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பாரதியாரின் 143 ஆவது பிறந்தநாள் பாரதி கண்ட புதுமைப் பெண்களால் புதுமையாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் கி. சித்ரா அவர்கள் தலைமையுரையாற்றினார். ”பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகிய நீங்கள்  பாரதியாரின் வைர வரிகளை நினைவில் கொண்டு, சரித்திரம் படைத்திடுங்கள்”   என்று மாணவியருக்கு உத்வேகம் ஊட்டினார்.  மாணவியர்கள் பாரதியார் வேடமிட்டும், பாட்டுப்போட்டியிலும்  காணொலிக்காட்சி உருவாக்கும் போட்டியிலும் கலந்துகொண்டனர்.  வெற்றி பெற்ற மாணவியருக்குப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக  கோவை அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்  RJ.பிரபுகுமார் அவர்கள் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *