, , ,

காரை விட்டு இறங்கமாட்டீங்களா? பொன்முடிக்கு சேற்று மண் ‘அடி’

பொன்முடி
Spread the love

தி.மு.க ஆட்சிக்கு வந்து கடந்த மூன்று ஆண்டுகளில், பல அமைச்சர்களின் செயல் பாடுகள் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகின. குறிப்பாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்தது.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் அமைச்சர் பொன்முடி பல விஷயங்களை சர்ச்சையாக பேசியுள்ளார். தி.மு.க அரசு நிறைவேற்றிய பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணம் செய்யலாம் என்கிற திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தால், பெண்கள் தங்கள் வருமானத்தில் கணிசமான தொகையை ஒவ்வொரு மாதமும் சேமிக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமையாகச் கூறிய நிலையில், தி.மு.க அரசின் திட்டத்தால் பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறார்கள் என்றும், ‘ஓசி பஸ்’ என்றும் அமைச்சர் பொன்முடி ஒரு கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
பின்னல், விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது, பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது” என்று கூறிய பொன்முடி, ஒன்றியக் குழு தலைவரைப் பார்த்து, “ஏம்மா…நீ எஸ்.சி தானே…” என்று மேடையிலே சாதி பற்றி பேசியிருந்தார். இவர் மட்டுமல்ல துரைமுருகன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் சர்ச்சையாக பேசியது முதல்வரையே புலம்ப வைத்து விட்டது.
அமைச்சர்களின் விரும்
பத்தகாத இத்தகைய பேச்சு
களாலும் செயல்களாலும், தி.மு.க அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக முதல்
வர் மு.க.ஸ்டாலின் உணர்ந்தார்.
எனவேதான், தூக்கத்தை இழந்து தவிப்பதாக கட்சியி
னர் மத்தியில் ஒரு முறை வேதனையை வெளிப்படுத்தி
னார் . தன்னைத் துன்புறுத்துவது போல் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்படக்கூடாது. நாள்தோறும் கட்சிக்காரர்கள் யாரும் புது பிரச்னையை உருவாக்கியிருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன்.
இது சில நேரங்களில் தூங்கவிடாமலும் செய்கிறது” என்று வேதனைப்பட்டார். மூத்த அமைச்சர்களின் பேச்சுக்கள் என்னைத் தூங்கவிடாமல் செய்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் பேசியபோது, அந்த மேடையில் அமர்ந்திருந்த பொன்முடி, முதல்வரின் பேச்சை சிரித்தபடி கேட்டுக்கொண்டிருந்தார் என்கிற விமர்சனமும் அப்போது எழுந்தது.
முதல்வரின் பேச்சுக்குப் பிறகு, ஏடாகூடமாகப் பேசி மாட்டிக்கொண்டுவிடக் கூடாது என்பதில் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள் கொஞ்சம் கவனமாகவே இருந்தார்கள்.ஆனாலும், பொன்முடி சர்ச்சையில் சிக்குவது முடிவுக்கு வரவில்லை. திருக்கோவிலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அதில் பேசிய பொன்முடி பேசிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் நிறைய குறைகள் இருப்பதாகக் கூறினார். அதனால் எரிச்சலடைந்த அமைச்சர் பொன்முடி, “என்னது குறையா… கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரு” என்று கோபப்பட்டார். பிறகு, “உன் வூட்டுக்காரர் வந்திருக்காரா?” என்று பொன்முடி கேட்டார். அதற்கு, “அவர் இறந்துட்டாரு என்று என்று அந்தப் பெண் பதில் சொல்ல… “போயிட்டாரா… பாவம்… நல்லவேளை…” என்று சிரித்தார் பொன்முடி. அமைச்சர் பொன்முடியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு கண்டத்துக்குள்ளானது.
இதற்கிடையே, பொன்முடி யிடம் இருந்த உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு வனத்துறை அமைச்சராக்கப்பட்டார். இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி புதுச்சேரிக்கு அருகே விழுப் புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கரையை கடந்தது.
இதனால் விழுப் புரம் மாவட்டம், வெள்ளத் தால் கடுமையாக பாதிக்கப்பட்டி
ருக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக் கான விவசாய நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கி கிடக்கின்றன. இந்த புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மக்களுக்கான உதவிகளை செய்யவும் அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார்.அப்போது அவர் தன்னுடைய காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த மக்கள், ‘காரில் இருந்து இறங்க மாட்டீங்களா… நேற்று வராமல் இப்போது எதற்காக வருகிறீர்கள் ?’ என்று வாக்குவாதம் செய்ததுடன், அமைச்சர் மீது மழை சேற்றை வாரி இறைத்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளி
யாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செய்தியாளர் களைச் சந்தித்த பொன்முடி, சேற்றை அடித்தவர் எந்த கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சாலை மறியல் செய்யப்பட்டது. யார் அரசியலாக்க நினைத்தாலும், வெள்ள பாதிப்பை தடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். இதனை நாங்கள் பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.