சீரற்ற இதயத்துடிப்பு (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) உலகம் முழுவதும் இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க உடல் நலப் பிரச்சினையாகும். வயதாக ஆக இந்தப் பிரச்சினை அதிகரிக்கிறது. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதனால் பாதிக்கப்பட 10% வரை அதிக வாய்ப்புள்ளது.
கேஎம்சிஎச் மருத்துவமனை கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ட்ரோ பிசியாலஜி துறையின் சார்பில் 9 ஆம் ஆண்டு கோவை ஹார்ட் ரிதம் கருத்தரங்கு நடைபெற்றது. இதயத் துடிப்பு சிகிச்சையில் புதிய முன்னேற்றங்கள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது இந்தியா முழுவதிலும் இருந்து 50–க்கும் மேற்பட்ட நிபுணர்களும் 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.. கிரையோ அப்லேஷன் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சீரற்ற இதயத்துடிப்பு நோய்க்கென்ற ஒரு பிரத்யேக சிகிச்சை மையத்தையும் துவக்கிய பெருமை கேஎம்சிஹெச் மருத்துவமனையைச் சாரும் என்று கருத்தரங்கு ஏற்பாட்டு செயலாளர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கை துவக்கிவைத்து உரையாற்றிய மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தாமதமாக நோய் கண்டறிதல், சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு பரிந்துரைத்தலில் தாமதம், முறையான சிகிச்சை பெற இயலாமை ஆகிய காரணங்கள் நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்திட தடையாக இருந்தன. தற்போது இந்த நோய்க்கென்றே பிரத்யேக மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கமான சிகிச்சை முறைகளைக் காட்டிலும் குறைவான மருத்துவ செலவு, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான தேவை குறைவு, பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு ஆகியவை இந்த புதுமையான சிகிச்சை முறையின் அனுகூலங்கள் ஆகும். நோயின் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால் ஆயுட்காலம் முழுவதும் மருந்துகள் எடுக்கத் தேவையில்லாமல் மருத்துவ செலவை பெருமளவு குறைத்துவிடலாம் என்று அவர் தெரிவித்தார்
கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி , கூறுகையில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும். முன்னர் கண்டறியமுடியாத அசாதாரண இதயத்துடிப்பு சிக்னல்களை தற்போது உடலில் அணிந்துகொள்ளும் கருவிகள் மூலம் எளிதில் அறிந்துகொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
Leave a Reply