கன்னியாகுமரி மாவட்ட கழக கள ஆய்வு கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இக்கள ஆய்வுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றினார், உடன் வரகூர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு கன்னியாகுமரி (கி) மாவட்ட மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி, பேரூர் ஊராட்சி கிளை நிர்வாகிகளிடம் வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் நிர்வாகிகள் மேற்கொள்ள விருக்கும் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி சிறப்பித்தனர். மேலும் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கிளை நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் ஊராட்சி கிளை சார்பு அணி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#admk #spv #kaniyakumariadmk #kanniyakumari #politics #tnadmk #NewsUpdate #newsfeed
Leave a Reply