கோவை கவுண்டம்பாளையம் ஜீவா நகரிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே மாநகராட்சியின் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தொடர்ந்து தீ மளமளவென குப்பைகளில் பரவியதில், கடும் புகை மூட்டம் எழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த கோவை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று நீண்ட நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தீ விபத்து காரணமாக புகை மூட்டம் ஏற்பட்டதில் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
Leave a Reply