இந்திய கடற்படையில்  முதல் முறையாக தலைவர்களான அக்கா தம்பி

Spread the love



இந்திய கடற்படையில்  முதல் முறையாக மும்பையை சேர்ந்த அக்கா தம்பி இருவரும் வெவ்வேறு போர்க்கப்பல்களில் தலைவராகியுள்ளனர்.

மும்பையை சேர்ந்த பிரெர்னா தீஸ்தாலேகடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்தார். கடந்த 2023-ஆம் கடற்படை தினத்தன்று ஐ.என்.எஸ்.டிரின்க்தா போர்க்கப்பலின் கமாண்டிங் ஆபிசராக பிரெர்னா நியமிக்கப்பட்டார். இந்திய போர்க்கப்பலில் பெண் ஒருவர் கமாண்டிங் ஆபிசராக நியமிக்கப்பட்டது இதுவே முதன்முறை.

பிரர்னா மிகப்பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சென்னையின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இதையடுத்து, ஐ.எஸ்.எஸ். டிரிங்க்டா தலைவராக பொறுப்பேற்றார். கடற்படை அதிகாரியை திருமணம் செய்துள்ள பிரர்னாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இதனையடுத்து பிரெர்னா தனது தம்பி இஷானையும் ஊக்கப்படுத்தி இந்திய கடற்படையில் இணைய வைத்திருந்தார். தற்போது, அவரின் தம்பி இஷானும் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விபூதிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்திய கடற்படையில் அக்காவும் தம்பியும் போர்க்கப்பல்களின் தலைவராக பணிபுரிவது இதுவே முதன்முறை. பெண்கள் ஆர்வமாக ராணுவங்களில் இடம் பெற முன் வர வேண்டும் என்றும்  கடற்படை தான் தனது வாழ்க்கை என்று பிரெர்னா கூறியுள்ளார்.