கோவை கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் மெகா கிளியரன்ஸ் விற்பனை துவங்கியுள்ளது என்று இந்த விற்பனை நிலையத்தின் முதுநிலை மண்டல மேலாளர் ப. அம்சவேணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” 90 வருட பாரம்பரியமிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மெகா கிளியரன்ஸ் விற்பனை கோவை மருதம் விற்பனை நிலையத்தில் 11.11.2024 முதல் 30.11.2024 வரை துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” 90 வருட பாரம்பரியமிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மெகா கிளியரன்ஸ் விற்பனை கோவை மருதம் விற்பனை நிலையத்தில் 11.11.2024 முதல் 30.11.2024 வரை துவக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான பட்டு புடவைகள், பருத்தி சேலைகள், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன் சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் இரகங்கள், குர்தீஸ், நைட்டிகள், ஆடவர்களுக்கான ரெடிமேட் சட்டைகள் போன்ற சில குறிப்பிட்ட இரகங்களுக்கு 40% முதல் 70% வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிறு உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் மருதம் விற்பனை நிலையம், கோயமுத்தூர் செயல்படும்.
மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.300- லிருந்து ஆரம்பமாகிறது. வாடிக்கையாளர்கள் 11 மாத சந்தா தொகையை செலுத்தினால் 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். வாடிக்கையாளர் கூடுதல் முதிர்வுத் தொகைக்கு துணிகளை பெற்றுக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, “என்று முதுநிலை மண்டல மேலாளர் ப. அம்சவேணி தெரிவித்துள்ளார்.
Leave a Reply