, , , , , , ,

“கோவை பெக்ஸ் 2024” அஞ்சல்தலை கண்காட்சி

Spread the love

கோ வை மாவட்ட அளவிலான அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி கோவைபெக்ஸ் 2024, 12.11.2024 மற்றும் 13.11.2024 ஆகிய தேதிகளில் சுகுணா திருமண மண்டபம், அவினாசி ரோடு, பீளமேடு, கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியில் பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள அஞ்சல் தலைகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல்தலை சேகரிப்பு கோவைபெக்ஸ் 2024 கண்காட்சியை, கோயமுத்தூர் மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்னன் இன்று துவைக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் கோயம்புத்தூர் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கே. சிவசங்கர் அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார். அஞ்சல் துரை தலைவர் சரவணன்,
செயலாளர் நராயணசுவாமி, ஆனைகட்டி SACON மூத்த முதன்மை விஞ்ஞானி ப்ரமொட் பத்மநபன், ஏ.பி.சி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த முதல் நாள் கண்காட்சியில் “கோவைபெக்ஸ் 2024” சிறப்பு தபால் உறை, பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளி சார்பில் சிறப்பு தபால் உறை & மை ஸ்டம்ப், புகைப்பட அஞ்சல் அட்டை எண் அஞ்சல் தலை வெளிடப்பட்டது.

கண்காட்சிக்கு கூடுதலாக பள்ளி மாணவர்களை மகிழ்விப்பதற்காக 1வது நாளில் பல்வேறு நடவடிக்கைகள் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், பள்ளி குழந்தைக்களுக்கான கடிதம் எழுதும் போட்டி, மாயா ஜால நிகழ்ச்சி, கடித பரிமாற்றம் வொர்க் ஷாப், அஞ்சல் உழியர்களின் கலை நிகழ்ச்சிகள் முதல் நாள் கண்காட்சியை 20 பள்ளிகளைச் சேர்ந்த 2000 மாணவர்கள் பார்வையிட்டனர். 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

கண்காட்சியின் போது பொது பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் 10 ஸ்டால்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.