தமிழ் திரை உலகில் உச்சபட்ச நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிக்கை மூலம் அறிவித்தார்.
சென்னை பனையூரில் கட்சி தலைமை அலுவலகம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் விமர்சனங்கள் ,பாராளுமன்றத் போட்டியிட்டு விஜய் தனது பலத்தை நிரூபித்திருக்க வேண்டும் என கூறினர்.
கொடி அறிமுகம்
தொடர்ந்து சில மாதங்கள் கழித்து கட்சியின் கொடியை அறிமுகம் செய்து ,கல்வி உதவித்தொகைகள் வழங்கி பேசினார்.
அப்போது கட்சி தொடர்பான அறிவிப்புகள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது .
தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு வந்தது முதலே,தமிழக அரசியல் களத்தில் சற்றே ரசாயன மாற்றம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன?அரசியல் நிலைப்பாடு என்ன? தமிழக அரசியல் தட்ப வெப்பத்திற்கு தகுந்தாற் போல அரசியல் பணிகளை தொடங்கப்படுமா? என்ற கேள்விகள் தமிழக அரசியல் கட்சிகளிடம் இருந்தது.
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்தியாளர்களுடன் பேசும்போது,
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் போது கட்சியின் கொடி விளக்கம், அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சித் தலைவர் அறிவிப்பார் என. கூறி வந்தார்.
இதனால் தமிழக வெற்றிக் கழகம் குறித்தான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
என்றாலும் அந்த கட்சி குறித்து அனைத்து தளங்களிலும் பரவலாக பேசப்பட்டது.
பிரம்மாண்ட மாநாடு
கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாடு, பலரும் எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. லட்சக்கணக்கான ஒரு பங்கேற்ற இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. தமிழை வழக்காடு மொழியாக்குவது, தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையை தொடர்வது ,
மாநில தன்னாட்சி உரிமையை காப்பது,ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவது, காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்குவது, நீட் தேர்வை எதிர்ப்பது உள்ளிட்டவைகள் அறிவிக்கப்பட்டன.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிய நடிகர் விஜய், சாதி, மதம்,இனம் என மக்களை பிரிக்கும் பிளவு அரசியலையும்,
ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரத்தின் எதிர்ப்பேன் என பாஜக மீது பாய்ந்தார்.
திமுகவிற்கு எதிர்ப்பு
தொடர்ந்து அவர், மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் எனக் கூறி ஏமாற்றுகிறார்கள்.திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் குடும்ப சுயநல கூட்டம் நமது அரசியல் எதிரி என ஆளும் திமுகவை பகிரங்கமாக சாடி பேசியது,திமுக எதிர்ப்பு நிலையை தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்துச் செல்லும் என்பதைக்காட்டுகிறது.
திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் பேசினார்.
இவரது இந்த பேச்சு நாம் தமிழர் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் ,நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.
கவலையில்லை
முதலமைச்சர் மு. க .ஸ்டாலின், புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக ஒழிய வேண்டும்; அழிய வேண்டும் என பேசி வருகிறார்கள், நான்கு ஆண்டுகளைத் தொடப்போகும் இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள என்பதை பாருங்கள். உங்களின் வகைச் சொற்களுக்கு எல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம் என விஜய் குறித்து தாக்கினார்.
அதற்கு முன்பு, அறிவாலயத்தில் நடந்த தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் விஜய் பற்றி அதிகமாக பேசப்பட்டது. மாநாட்டில் அதிகமான இளைஞர்கள் கூடியுள்ளனர். அதனால் வரும் தேர்தலில், விஜயால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதனை கருத்தில் கொண்டு ஆளும் திமுக தரப்பினர் தங்களது பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.
நம்மை நம்பி வருவோரை நாம் அரவணைக்க வேண்டும் என்ற விஜயின் பேச்சு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது என பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
எதிர்பார்ப்பு
தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தடுத்த நகர்வுகள், தமிழக அரசியல் களத்திலும்,
அரசியல் கட்சிகள் இடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
Leave a Reply