, , , , ,

விஜய் கட்சியில் பூத் கமிட்டியை பலப்படுத்த உத்தரவு! வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் பங்கேற்க அறிவுரை

vijay
Spread the love

கோவை : நடிகர் விஜய் துவக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்து, பூத் கமிட்டியை பலப்படுத்தவும், 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோவையில் இருந்து மாவட்டம் வாரியான சுற்றுப் பயணத்தை துவக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கட்சி செயல்பாடுகளை விமர்சித்தால், ஆக்கப்பூர்வமாக பதிலளியுஙகள். ஆதாரத்துடன் பதிலளியுங்கள்; தரம் தாழ்ந்த விமர்சனத்தை கண்டுகொள்ளாதீர்கள். உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்; அனைத்து பகுதிகளிலும் கிளைகள் துவக்க வேண்டும். கட்சி கட்டமைப்பை பலப்படுத்த நிர்வாகிகள் நியமிக்க வேண்டும். வார்டு வாரியாக கூட்டங்கள் நடத்த வேண்டும்.அறிவுரை

மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும்; அதை வீடியோ எடுத்து, ‘வாட்ஸ்ஆப்’ ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும். கட்சியின் செயல் திட்ட அறிக்கை நோட்டீஸ் தலைமையில் இருந்து அனுப்பி வைக்கப்படும்; வீடு வீடாக சென்று மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ நடத்தியபோதே, பூத் கமிட்டி இருக்கிறது. கட்சி துவங்குவதற்கு முன்பே, பூத் கமிட்டி அமைத்து உறுப்பினர்கள் நியமித்துள்ளோம். இதை பலப்படுத்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். ஒவ்வொரு பூத் கமிட்டியிலும், 10 பேர் இடம் பெறுவர்; பெண்களுக்கு, 50 சதவீதம் ஒதுக்கப்படும். கட்சியில் முழுக்க முழுக்க இளைஞர்கள் மட்டுமே இருக்கின்றனர். மகளிரணி பலமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *