,

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு​ – இருவர் கைது

vandebharat
Spread the love
வந்தே பாரத் ரயில்கள் மீது சில சமூக விரோதிகள் கல்வீசும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 07/12/2023 வியாழன் இரவு சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.

அப்போது, பீளமேடு மற்றும் வடகோவை ரயில் நிலையங்கள் இடைப்பட்ட பகுதியில் கடந்த போது, மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கற்களை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதுகுறித்து சவ்ரவ் குமார், சேலம் கோட்ட ஆணையர், இரயில்வே பாதுகாப்பு படை உத்தரவின் பேரில், ரதீஷ் பாபு, உதவி ஆணையர், ரயில்வே பாதுகாப்பு படை, கோவை மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த தனி படையினர்  தேடுதல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும்,  ஆலிஸ் ஆண்டனி உதவி ஆய்வாளர் பீளமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, ரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்ததில், அவர்கள் கடந்த 07/12/2023 அன்று வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர்களான மன்னார்குடியை சேர்ந்த சரவணன் (28), மற்றும் கோவை கோவில்மேடை சேர்ந்த ஜெகதீஷ் (23), ஆகிய இருவரும் விளையாட்டுக்காக ரயில் மீது கல் வீசியதாக ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்த ஆர்பிஎஃப் அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.