காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்கக்கோரி வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி

Spread the love

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யானைகளால் உயிரிழப்பு யானைகளால் பயிர் சேதம் ஆகியவற்றை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும், மலையோரக் கிராமங்களிலும் யானைகள் புகுந்து மக்களை அச்சுறுத்துவதையும், விவசாய விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதையும் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், தொகுதி முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தடுப்பு வேலி அமைப்பது தொடர்பாகவும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி,உடன் ஒன்றிய குழு தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள்.