Spread the love

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தும், கால்வாய்கள் நிரம்பியும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மின்சாரத் துறை அமைச்சரும், கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிங்காநல்லூர் அருகே உள்ள கதிரவன் கார்டன் பகுதியில்,வாய்க்காலில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். அப்பகுதி மக்களின் கோரிக்கையின் பேரில், அவர்களது குடியிருப்பு பகுதிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.மக்கள் அமைச்சரிடம் சாலைகள் அமைத்துத் தருமாறும், வாய்க்காலை முறையாகப் பராமரித்து மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர், உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கோவை கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி துணை மேயர் விட்டுச்செல்வன் மாவட்ட செயலாளர் நா கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *