,

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பேரிடர் கால அவசர திறன் ஒத்திகை பயிற்சி

Mock Drill
Spread the love

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் பேரிடர்கால வெளிப்புற ஒத்திகை பயற்சியை நடத்தியது.
பேரிடர் காலங்களில் நடக்கும் விபத்துகளை சமாளிக்க மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதிரி ஒத்திகை பயிற்சிகளை நடத்துகிறது. இப்பயிற்சியானது அவசரகால சூழ்நிலையில் முதல் ஒரு மணி நேரத்திற்குள் உயிர்களைக் காப்பாற்றும் ‘கோல்டன் ஹவர்” என்ற கருத்தை எடுத்துரைக்கிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் ‘பேரிடர்கால ஒத்திகை பயிற்சி’யை தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் கோவை ரயில் நிலையத்துடன் இணைந்து நடத்தியது. இந்த ஒத்திகை பயிற்சியில், ரயில் விபத்தில்  இருபத்தெட்டு பயணிகள் மற்றும் இரண்டு ரயில் ஓட்டுநர்கள் காயமடைந்துள்ளனர் என சித்தரிக்கப்பட்டது. இந்த ஒத்திகை பயிற்சி விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பெருமளவு காயமடைந்தவர்களை கையாள்வது மற்றும் விரைந்து திறம்பட நோயாளிகளை வகைப்படுத்தும் செயல்முறை பற்றி மருத்துவ பணியாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதற்கான பயிற்சியாக வடிவமைக்கப்பட்டது.
பேரிடர்கால அவசரநிலை குறித்து கோவை ரயில் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைப்பு வந்தவுடன் “மஞ்சள் குறியீடு” (Code Yellow) அறிவிக்கப்பட்டு, மருத்துவமனையின் அவசரநிலை குழுக்களான தல மீட்பு குழு (Site Recovery), உள் ட்ரைஜ் குழு (Internal Triage), கார்டன் குழு (Cordon), சால்வேஜ் குழு (Salvage) மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் மேலாண்மை குழு (Patient Information Media Management) ஆகிய ஐந்து குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்தில் தல மீட்புக் குழு உடனடியாக காயமடைந்தவர்களுக்கு தேவையான முதல் உதவியை வழங்கி, அவர்களை வகைப்படுத்தியது. பின்னர், ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மருத்துவமனையில் உள் மருத்துவக் குழு பரிசோதித்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து காயமடைந்தவர்களை வகைப்படுத்தி, மேல் சிகிச்சைக்காக மாற்றியது.
அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து, காயமடைந்த ஆறு நபர்களை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்த இரண்டு நபர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் காயமடைந்த பத்து நபர்கள் அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்த ஐந்து நபர்கள் (கிரீன் வகை ) அவசர சிகிச்சையிலிருந்து புறநோயாளிகள்  அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்த மூன்று நபர்கள் எலும்பு முறிவு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். விபத்தில் காயமடைந்து மரணமடைந்த இரண்டு நபர்கள் (கருப்பு வகை. Black Triage) அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து மார்ச்சுவரிக்கு மாற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களை அந்தந்த வார்டுகளுக்கு திறம்பட மாற்றுவதில் கார்டன் குழு உதவியது. மற்றும் சால்வேஜ் குழு நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று கவனித்தது. இந்த முழு ஒத்திகை பயிற்சியும் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டது. இறுதியில், தலைமை நிர்வாக அதிகாரி சி.வி ராம்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். ராஜகோபால் , மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் , அவசர சிகிச்சை ஆலோசகர்கள் டாக்டர் மஞ்சுநாத், டாக்டர் பார்த்திபன் ஆகியோர் செய்தி ஊடகத்திற்கு பேரிடர்கால ஒத்திகை பயிற்சி குறித்த தகவல்களை வழங்கினார்கள். கோவை மாநகர துணை ஆணையர் டாக்டர் ஸ்டாலின் நேரில் வந்து ஒத்திகை பயிற்சியை பார்வையிட்டார்.
மேலும் இம்மாதிரி பயிற்சியில் கோவை ரயில் நிலைய அதிகாரிகள் கோட்டப் பாதுகாப்பு அதிகாரி ஆகாஷ் வர்மா , கோவை நிலைய இயக்குனர் சச்சின் குமார் , கோச்சிங் டிபாட் அதிகாரி  அனுஜ் ரத்தோர் , உதவி பாதுகாப்பு ஆணையர் ரதிஷ் குமார், கோவை நிலைய மேலாளர் ஸ்ரீ தரன், கோவை நிலைய உதவி மேலாளர் சதீஷ்,, ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள்  மற்றும் கோவை ரயில் நிலைய  ஊழியர்கள் பங்குபெற்றனர். இம்மாதிரி பயிற்சியை நடத்த தெற்கு ரயில்லே யின் சேலம் கோட்டம் மற்றும் காவல் துறையிடமிருந்து முன் அனுமதி பெறப்பட்டது. பொதுமக்களிடையே பீதியைத் தவிர்ப்பதற்காக இது ஒரு விழிப்புணர்வு நிகழ்வு என்று குறிப்பிடும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டது.
மேலும், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் , கோவை ரயில் நிலைய ஊழியர்களுக்கு சிபிஆர்பயிற்சியளித்தனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, இது போன்ற கடுமையான நிகழ்வுகளின் போது உயிர்களை காப்பாற்றுவதற்காக, என்ஏபிஎச் விதிமுறைகளைப் பின்பற்றி, ஒவ்வொரு ஆண்டும் பேரிடர்கால மேலாண்மை ஒத்திகை பயிற்சிகளை நடத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *